search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
    X
    வாலாஜா அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    வாலாஜா கலைக்கல்லூரி மாணவிகள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

    வாலாஜா கலைக்கல்லூரி மாணவிகள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கிப் பயிலும் அரசினர் மாணவிகள் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் மாணவிகளின் அறைகளில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளக்கு, மின்விசிறி, தங்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து விடுதியில் இருந்த நூலகத்தில் என்னென்ன வகையான புத்தகங்கள் உள்ளது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மாணவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்தி வருவதையும் அவர்களின் அறிவுத் திறனையும் கேட்டறிந்தார். 

    அரசுத் தேர்வுகளுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து மாணவிகள் விடுதியில் வெளியே காலியாக உள்ள இடங்களை சுத்தம் செய்து அந்த இடத்தில் மரம், செடிகள் மற்றும் காய்கறி தோட்டங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என வாலாஜா தாசில்தாரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

    இந்த ஆய்வின்போது தாசில்தார் ஆனந்தன், விடுதிக் காப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×