search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வானூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு பொருட்கள் திருட்டு

    வானூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள அருவாபாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த வார 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியில் உள்ள சத்துணவு அறை பூட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த சத்துணவு ஊழியர் அறையை திறந்து பார்த்தபோது அந்த அறையில் வைத்திருந்த பாமாயில் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சத்துணவு மைய பொறுப்பாளர் வெண்மதி கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின்பேரில் கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி சம்பா இடத்திற்கு விரைந்து வந்து மர்மமான முறையில் சத்துணவு பொருள்களைத் திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை மற்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×