search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    செல்போன் கடையில் திருட்டு

    செல்போன் கடையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    சேலம்:

    சேலம் அழகாபுரம் எம்.ஜி. ரோடு வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்தவர் ஆரிப் (வயது 25).இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அத்வைத ஆசிரம ரோட்டில்  செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் சர்வீஸ்க்கு கொடுக்கப்பட்ட   4 செல்போன்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

    இதுகுறித்து ஆரிப்  பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×