என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்21 May 2022 9:49 AM GMT (Updated: 21 May 2022 9:49 AM GMT)
பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, உடுமலை, குண்டடம், பொங்கலூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பணியிடத்துக்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலைபட்டம் பெற்றவர்கள் 10 வருட அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://bit.ly/38zmZPo என்ற இணையதளமுகவரியில் பெற்று வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X