search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
    திருப்பூர்:

    தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, உடுமலை, குண்டடம், பொங்கலூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இந்த பணியிடத்துக்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலைபட்டம் பெற்றவர்கள் 10 வருட அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://bit.ly/38zmZPo என்ற இணையதளமுகவரியில் பெற்று வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×