search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுநீதி நாள் விழாவில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
    X
    மனுநீதி நாள் விழாவில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

    மனு நீதிநாள் முகாமில் ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்

    மேல்நாச்சிப்பட்டு ஊராட்சியில்மனு நீதிநாள் விழா நடந்தது. இதில் ரூ.5லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நாச்சிப்பட்டு ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலின்பேரில் மனுநீதிநாள் திட்ட விழா நேற்று நடைபெற்றது.
     
    இந்த விழாவுக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். செங்கம் தாசில்தார் சி.முனுசாமி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பி.பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் கே.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமையொட்டி மொத்தம் 51 மனுக்கள் பொதுக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் 42 மனுக்கள் தகுதியானதாகும். 9 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

    இந்தவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. 42 பயனாளிகளுக்கு ரூ.5லட்சம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டை, நத்தம் தனிப்பட்டா மாறுதல் பௌத்தி நிலப்பட்டா மாறுதல் நத்தம் சிட்டா நகல் உட்பிரிவு பட்டா மாறுதல் முதியோர் மற்றும் விதவை தொகை பெறுவதற்கான ஆணை இலவச தொகுப்புவீடு கட்ட ஆணை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த விழாவில் மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆர்.மனோகர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் ஆறுமுகம் சார்ஆய்வாளர் ஏ.தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்.ராஜாராம், டி.ரகு பி.பிரிதபா, எஸ்.அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் வி.வாசுகிவேலு துணைத் தலைவர் அமுதம் அருள்குமார் ஒப்பந்ததாரர் பி.தங்கமணி உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஏ.முருகன் நன்றி கூறினார்.
    Next Story
    ×