search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசூரில் மனைவி கழுத்தை அறுத்த கணவர் அதிரடி கைது

    ஓசூரில் மனைவி கழுத்தை அறுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஒசூர், 

    ஒசூர் ஆவலப்பள்ளி ரோடு பாரதியார் நகரை சேர்ந்தவர் கணேஷ் குமார், இவரது மனைவி மீனா (வயது23).  கணேஷ் குமார் தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ நாளன்று, கணேஷ் குமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, தகராறு செய்து வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மீனா கழுத்தை அறுத்துள்ளார்.
    இதனால் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதே கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இது குறித்து மீனா ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×