என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் அருகே பி.எப். கணக்கில் பணம் செலுத்தக்கோரி பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
Byமாலை மலர்20 May 2022 9:32 AM GMT (Updated: 20 May 2022 9:32 AM GMT)
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பி.எப். கணக்கில் பணம் செலுத்தக்கோரி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் பீடி நிறுவனம் ஒன்று பீடிக் கடை நடத்தி வருகிறது. இங்கே உள்ள 2 கிளைகளிலும் தலா 500 பெண்கள் பீடி சுற்றி வருகிறார்கள்.
கடந்த 15 மாதங்களாக இவர்களது பி.எப். கணக்கில் பீடிக்கடை நிர்வாகம் பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று 2 கிளை கடைகளின் முன்பும் பெண்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
15 மாதங்களாக செலுத்தாமல் உள்ள தொகையை உடனடியாக பி.எப். கணக்கில் செலுத்த வேண்டும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் தொகையை உடனடியாக மாதம்தோறும் வழங்க கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தின்போது கடை நிர்வாகம் அதன் காண்ட்ராக்டரை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட அதே காண்ட்ராக்டரை மீண்டும் அதே கிளையில் பணியமர்த்த கோரி இன்று சுமார் 200-க்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்கள் அந்த கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் பீடி நிறுவனம் ஒன்று பீடிக் கடை நடத்தி வருகிறது. இங்கே உள்ள 2 கிளைகளிலும் தலா 500 பெண்கள் பீடி சுற்றி வருகிறார்கள்.
கடந்த 15 மாதங்களாக இவர்களது பி.எப். கணக்கில் பீடிக்கடை நிர்வாகம் பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று 2 கிளை கடைகளின் முன்பும் பெண்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
15 மாதங்களாக செலுத்தாமல் உள்ள தொகையை உடனடியாக பி.எப். கணக்கில் செலுத்த வேண்டும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் தொகையை உடனடியாக மாதம்தோறும் வழங்க கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தின்போது கடை நிர்வாகம் அதன் காண்ட்ராக்டரை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட அதே காண்ட்ராக்டரை மீண்டும் அதே கிளையில் பணியமர்த்த கோரி இன்று சுமார் 200-க்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்கள் அந்த கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X