என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, போக்சோவில் டிரைவர் கைது
Byமாலை மலர்20 May 2022 9:28 AM GMT (Updated: 20 May 2022 9:28 AM GMT)
சென்னிமலை அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
சென்னிமலை அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னிமலை அடுத்த வெள்ளோடு நானிபாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் (44). டிரைவர்.
இந்நிலையில் நேற்று இரவு 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாக்கியராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் பாக்கியராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பாக்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X