என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூச்சிக்காடு, மணிநகர் விலக்கில் மேடை அமைப்பில் அமைக்கப்பட்ட வேகத்தடை உயரம் குறைப்பு
Byமாலை மலர்20 May 2022 8:45 AM GMT (Updated: 20 May 2022 8:45 AM GMT)
சாத்தான்குளம் அருகே பூச்சிக்காடு, மணிநகர் விலக்கில் மேடை அமைப்பில் அமைக்கப்பட்ட வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகர் விலக்கிலும், அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பூச்சிக்காடு விலக்கில் அடிக்கடி விபத்து நிகழ்ந்த வண்ணம் இருந்தது.
இதனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 2 இடங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகதடை அமைக்கப்பட்டது. வேகத்தடையான மற்ற இடங்களை போல் இல்லாமல் ஒரு அடி உயரத்துக்கு மேடை போல் அமைக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். மேலும் எந்நேரமும் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், அதனை அகற்றி வழக்கமான வேகத்தடை அமைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இந்த வேகத்தடை அளவை குறைக்க வலியுறுத்தி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சாத்தான்குளம் உதவி பொறியாளர் முத்துபெருமாள், சாலை ஆய்வாளர் முருகன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் ஆகியோர் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் ஆர்.எஸ். சுந்தரவேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பவன் உள்ளிட்டோர் நேற்று அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, வேகத்தடையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மேடை போல் அமைக்கப்பட்ட வேகத்தடையை உடைத்து அரை அடி குறைத்து வேகத்தடை மாற்றி அமைக்கப்பட்டது. இதனை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகர் விலக்கிலும், அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பூச்சிக்காடு விலக்கில் அடிக்கடி விபத்து நிகழ்ந்த வண்ணம் இருந்தது.
இதனால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 2 இடங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகதடை அமைக்கப்பட்டது. வேகத்தடையான மற்ற இடங்களை போல் இல்லாமல் ஒரு அடி உயரத்துக்கு மேடை போல் அமைக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். மேலும் எந்நேரமும் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், அதனை அகற்றி வழக்கமான வேகத்தடை அமைக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இந்த வேகத்தடை அளவை குறைக்க வலியுறுத்தி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சாத்தான்குளம் உதவி பொறியாளர் முத்துபெருமாள், சாலை ஆய்வாளர் முருகன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் ஆகியோர் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் ஆர்.எஸ். சுந்தரவேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பவன் உள்ளிட்டோர் நேற்று அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, வேகத்தடையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மேடை போல் அமைக்கப்பட்ட வேகத்தடையை உடைத்து அரை அடி குறைத்து வேகத்தடை மாற்றி அமைக்கப்பட்டது. இதனை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X