search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    இளம்பெண் கடத்தல்

    அருப்புக்கோட்டை அருகே பெற்றோர் கண் முன்பு இளம்பெண் கடத்தப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்கு ளத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன். இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். 

    சம்பவத்தன்று மல்லிகார்ஜூனன்- பாண்டிச்செல்வி ஆகியோர் 2-வது மகளுடன் வெளியே புறப்பட்டுச் சென்றனர். மாங்குளம் கண்மாய் பகுதியில் சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து மல்லிகார்ஜூனனின் 2-வது மகளை கடத்திச் சென்றார். இதனை தடுக்க முயன்றும் பலனில்லை. 

    இதுகுறித்து பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற மாரிச்செல்வத்தையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×