search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

    ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 26-ந்தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட  ஆண்களுக்கான கருத்தடை  சிகிச்சை மிக எளிமையானது, மிகவும் பாதுகாப்பானது, பயப்பட தேவையில்லை, மயக்கு மருந்து கொடுப்பதில்லை

    5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது,  தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம்.

    அரசு தரும்   தொகை  ரூ.1100   வழங்கப்படும், ஊக்குவிப்பாளருக்கு    ரூ.200-ம் உடன் வழங்கப்படும். மாவட்ட கலெக்டரால் வழங்கப்படும் ரூ.4 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகை யால் முகாமிற்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் தங்களது அல்லது தங்கள் மனைவி வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்களை கொண்டு வர வேண்டும். 

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×