என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்19 May 2022 10:24 AM GMT (Updated: 19 May 2022 10:24 AM GMT)
மதுரையில் வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மதுரை
மதுரை காமராஜர் சாலை, தங்கம் நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி செல்வி (வயது 27).
இவரது சகோதரர் வினோத் என்பவரை ஒரு கும்பல் கடந்த ஆண்டு கொலை செய்தது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் செல்வி நேற்று மதியம் தெப்பகுளம், மருதுபாண்டியர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கருப்ப பிள்ளையேந்தல் கார்த்திக்ராஜா, கல்மேடு அருண்குமார் மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பேர், ‘வழக்கை வாபஸ் வாங்கு, இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக செல்வி தெப்பகுளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X