என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே அழுகும் மல்லி பூக்கள்- விவசாயிகள் வேதனை
Byமாலை மலர்19 May 2022 9:12 AM GMT (Updated: 19 May 2022 9:12 AM GMT)
தருமபுரியில் தொடர் மழையால் செடியிேலயே மல்லி பூக்கள் அழுகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பகுதிகளில் விவசாயத்தில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பூ பூக்கும் தருவாயில் உள்ள செடிகள் பெரும்சேதம் அடைகிறது.
இரவு நேரங்களில் கொட்டும் இந்த மழையால் பல இடங்களில் பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மாவ ட்டத்தில் அதிக அளவில் மல்லி செடிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த செடிகள் பூ பூக்கும் தருவாயில் இரவு நேரம் பெய்த மழையால் பூ பரிக்க முடியவில்லை.
பூக்கள் செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் மல்லி செடிகள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பல ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X