search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாயில் வெள்ளை நிற துணியை கட்டி அறப்போராட்டம் நடத்திய காங்கிரசார்.
    X
    வாயில் வெள்ளை நிற துணியை கட்டி அறப்போராட்டம் நடத்திய காங்கிரசார்.

    பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் அறவழிப் போராட்டம்

    பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் அறவழிப் போராட்டம் நடத்தினர்.
    நெல்லை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வாயில் வெள்ளை நிற துணியை கட்டி காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். 

    அதன்பேரில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். 

    தொடர்ந்து பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார், சிறுபான்மை பிரிவு மாநில இணைச்செயலாளர் தேவதாஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் பரணி இசக்கி, குறிச்சி கிருஷ்ணன், ஓபிசி பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் முகம்மது அனஸ் ராஜா, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×