search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பணகுடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

    பணகுடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் நதிப்பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 78). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுக்கவே பால்பாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

     அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×