search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    மாநிலகுழு தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார்.வட்டார செயலாளர்கள், அசோக்ராஜ், நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, பாலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அலுவலகம் முன்பு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது அங்கு வந்த தாசில்தார் பாபு “மனுக்களை கொடுங்கள். தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதை மொத்தமாக தாசில்தார் பாபுவிடம் வழங்கினர்.
    Next Story
    ×