search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தற்கொலை

    பாவூர்சத்திரம் அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையனூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் கண்ணன் (வயது 33). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

     இதையடுத்து அவருக்கு 2-வது திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷ மருந்தை கண்ணன் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார். உடனே அவரது பெற்றோர் கண்ணனை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

     அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×