search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகள் நட்ட போலீஸ் சூப்பிரண்டு
    X
    மரக்கன்றுகள் நட்ட போலீஸ் சூப்பிரண்டு

    மரக்கன்று நட்ட போலீஸ் சூப்பிரண்டு

    முதுகுளத்தூர் டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மரக்கன்றுகள் நட்டார்.
    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் டி,எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு கார்த்திக் மரக்கன்றுகளை நட்டார். டி,எஸ்.பி. சின்னக் கன்னு, இன்ஸ்பெக்டர் மோகன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி உளவுத்துறை சப்-இன்ஸபெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்ட 10 காவலர்களுக்கு நினைவுப் பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் வழங்கினார். 

    பின்னர் அவர் கூறுகையில், அமுதசுரபி என்ற தனியார் வங்கியினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் டெபாசிட்டுகளை பெற்று வங்கிகளை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதன் தலைமையகம் சேலத்தில் உள்ளது. 

    இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார். முதுகுளத்தூர் காவல் நிலைய பகுதிகளை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் ஆய்வாளர் மோகன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
    Next Story
    ×