search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவில் மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

    19 ந்தேதி நாளை காலை அக்னிச்சட்டி எடுத்தல், மாலை அலகு குத்துதல், இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 20 ந்தேதி அபிஷேகம், மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ர–ங்கம் மாரியம்மன் கோவில்.  பொங்கல் திருவிழாவையொட்டி, இந்த மாதம் மே-3 ந்தேதி பூச்சாட்டுதல், 10-ந்தேதி கம்பம் போடுதல், நேற்று 17-ந்தேதி கொடுமுடி காவிரி ஆற்றங்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல் நிகழ்ச்சி மற்றும் மாவிளக்கு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இன்று 18  ந்தேதி புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதைஅடுத்து 19-ந்தேதி நாளை காலை அக்னிச்சட்டி எடுத்தல், மாலை அலகு குத்துதல், இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 20-ந்தேதி  அபிஷேகம், மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மயில்ரங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×