search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள்.
    X
    உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள்.

    கீழ்பவானி பாசன வாய்க்காலில் செயல்படுத்த உள்ள கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்-கடையடைப்பு

    வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.720 கோடி ரூபாய் மதிப்பீட்டில கடந்த ஆட்சியில் அதிமுக நடவடிக்கை எடுத்தது.
    திருப்பூர்:

    கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி காங்கயம் அருகே உள்ள திட்டுப்பாறை கிராமத்தில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் 500 க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர் மாவட்டம் மங்கலப்பட்டி வரை 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ்பவானி வாய்க்காலானது கடந்த 1958 ம் ஆண்டு வெட்டப்பட்டது. இந்த வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் நேரடியாக ஆண்டு தோறும் 2 லட்சத்து 7ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்களும், கசிவு நீர் திட்டங்கள் மூலமாகவும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த கசிவு நீரை நம்பி ஊராட்சிகளில் குடிநீருக்காக ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கடை மடை வரை தண்ணீர் செல்வதில்லை எனக்கூறி,வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.720 கோடி ரூபாய் மதிப்பீட்டில கடந்த ஆட்சியில் அதிமுக நடவடிக்கை எடுத்தது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த திட்டத்தில் விவசாயம், குடிநீர்,சுற்றுச்சூழல் மற்றும் கசிவுநீர் திட்டங்கள் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயம் அருகே உள்ள திட்டுப்பாறை கிராமத்தில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கீழ்பாவனி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டு,கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திட்டுப்பாறை, சென்னிமலை, மங்களப்பட்டி, திட்டம் பாளையம், நத்தக்காடையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
    Next Story
    ×