என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பரமத்திவேலூரில் சாக்கடை கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
Byமாலை மலர்18 May 2022 9:59 AM GMT (Updated: 18 May 2022 9:59 AM GMT)
பரமத்திவேலூரில் சாக்கடை கட்டும் பணியை விரைந்து முடித்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு ட்பட்ட வெட்டுக்காட்டுப்புதூர் 3-வது வார்டுஅன்புநகர் பகுதியில் சாலையுடன் கூடிய சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர் பேரூராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
3-வது வார்டு அன்பு நகரில் சாக்கடை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த பல நாட்களாக சாக்கடை பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சாக்கடை பணியை முடித்து தர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியும் ஒப்பந்ததாரர் அப்பணியை செய்யாமல் காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில் குடியிருப்பு வீடுகளுக்கு முன்பு சாக்கடை அமைக்க ஆழமான குழி தோண்டப்பட்டுள்ளதால் குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் பலகையை அமைத்து அதன் மூலம் கடக்க முடியாத நிலையும், அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை பணியை விரைந்து முடித்துதரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெட்டுக்–காட்டுப்புதூர் அருகே பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாக்கடையை விரைவில் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு ட்பட்ட வெட்டுக்காட்டுப்புதூர் 3-வது வார்டுஅன்புநகர் பகுதியில் சாலையுடன் கூடிய சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர் பேரூராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
3-வது வார்டு அன்பு நகரில் சாக்கடை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த பல நாட்களாக சாக்கடை பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சாக்கடை பணியை முடித்து தர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியும் ஒப்பந்ததாரர் அப்பணியை செய்யாமல் காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில் குடியிருப்பு வீடுகளுக்கு முன்பு சாக்கடை அமைக்க ஆழமான குழி தோண்டப்பட்டுள்ளதால் குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் பலகையை அமைத்து அதன் மூலம் கடக்க முடியாத நிலையும், அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை பணியை விரைந்து முடித்துதரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெட்டுக்–காட்டுப்புதூர் அருகே பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாக்கடையை விரைவில் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X