search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பரமத்திவேலூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் வியாபாரிகள் பாதிப்பு

    பரமத்திவேலூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையார், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சிறுநல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், திரும்மல், கொத்தமங்கலம், வடகரையாத்தூர், கபிலர்மலை, கோப்பணம் பாளையம், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4.30 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணி வரை மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் மற்றும் பல்வேறு வகையான கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அவர்கள் பாதிப்படைந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பியவர்கள், வெளி–யூர்களுக்கு சென்றவர்கள் கடும் மழையின் காரணமாக நனைந்து கொண்டே சென்று அவதிப்பட்டனர். கடந்த வாரம் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக கிராமப்புறங்களில் பயிரிட்டுள்ள பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கனமழையின் காரணமாக சாலையோரத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி பட்டு சென்றனர். இரவு பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×