என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜோலார்பேட்டை ரெயிலில் சிறுவன் மீட்பு
Byமாலை மலர்18 May 2022 9:52 AM GMT (Updated: 18 May 2022 9:52 AM GMT)
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயிலில் வந்த சிறுவனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஜம்முதாவி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை வந்து நின்றது.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்தனர்.
முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சோதனை செய்யும் போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் வயது 15 சிறுவன் என தெரிய வந்தது.
மேலும் தன்னுடைய தாய் இறந்துவிட்டார் இந்நிலையில் மாற்றுதிறனாளி என்பதால் நான் ஓடும் ரெயிலில் பிச்சை எடுப்பதற்காக ரெயிலில் வந்ததாக தெரிவித்தான்.
இதனால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X