என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏ.டி.எம் மிஷினை உடைத்து பணம் திருட முயன்றவர் கைது
Byமாலை மலர்18 May 2022 9:44 AM GMT (Updated: 18 May 2022 9:44 AM GMT)
மேச்சேரியில் ஏ.டி.எம் மிஷினை உடைத்து பணம் திருட முயன்றவர் கைது
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏடிஎம் மிஷினை மர்ம நபர் உடைத்து பணம் திருட முயற்சி செய்தார். அப்பொழுது இந்த மிஷினில் இருந்து அலாரம் சத்தம் அடித்தவுடன் அந்த மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மேச்சேரி பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அந்த நபர் ஒரு பையில் இரும்புராடு, இரும்பு சுத்தியல் ஆகியவை வைத்திருந்தார்.
அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரிக்கையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உதய பிரகாஷ் (வயது 23) என்பதும் சம்பவத்தன்று இவர் மிஷினை ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதய பிரகாஷை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X