search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பாடியில் மேம்பாலத்தின் கீழ் வாலிபர் வெட்டிக்கொலை

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாடி மேம்பாலத்தின் கீழ் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது35). கொரட்டூரில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்றுஇரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் கிடந்த இடம் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அய்யப்பன் கடைசியாக யாருடன் சென்றார்? அவரது நண்பர்கள் யார்? யார்?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாடி மேம்பாலத்தின் கீழ் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×