search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மோட்டார் சைக்கிள் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

    ஆதம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீராங்கனை ஒருவர் கடந்த 10-ந்தேதி தேதி இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசி தவறாக நடக்கமுயன்றார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிள் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்றது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சந்திரகாசன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சந்திரகாசன், பாரிமுனையில் உள்ள இரும்பு நிறுவனத்தில் வேலை செய்துவருவதும், இரவு நேரத்தில் பகுதி நேரமாக வாடகை பைக் ஓட்டி வருவதும தெரிந்தது.
    Next Story
    ×