search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    விழுப்புரம் அருகே விபத்து- பஸ் மோதி மீன் வியாபாரி பலி

    விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மீன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே காணை மேட்டு தெருவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 70). இவர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களை மொத்தமாக வாங்கி ஊர் ஊராக மோட்டார் சைக்கிளில் சென்று விற்பனை செய்து வந்தார்.

    அதன்படி நேற்று இரவு கெடார் ஏரியில் மீன்களை வாங்கிக் கொண்டு விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கெடார் பஸ் நிறுத்தம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைக்காரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மீன் வியாபாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×