என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரம் அருகே விபத்து- பஸ் மோதி மீன் வியாபாரி பலி
Byமாலை மலர்17 May 2022 11:06 AM GMT (Updated: 17 May 2022 11:06 AM GMT)
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மீன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே காணை மேட்டு தெருவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 70). இவர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களை மொத்தமாக வாங்கி ஊர் ஊராக மோட்டார் சைக்கிளில் சென்று விற்பனை செய்து வந்தார்.
அதன்படி நேற்று இரவு கெடார் ஏரியில் மீன்களை வாங்கிக் கொண்டு விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கெடார் பஸ் நிறுத்தம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைக்காரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மீன் வியாபாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் அருகே காணை மேட்டு தெருவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (வயது 70). இவர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களை மொத்தமாக வாங்கி ஊர் ஊராக மோட்டார் சைக்கிளில் சென்று விற்பனை செய்து வந்தார்.
அதன்படி நேற்று இரவு கெடார் ஏரியில் மீன்களை வாங்கிக் கொண்டு விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கெடார் பஸ் நிறுத்தம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைக்காரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மீன் வியாபாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X