search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர், இந்திரா காந்தி சிலைகளை கே.எஸ். அழகிரி, கனிமொழி எம்.பி., ஆகியோர் திறந்து வைத்த போது எடுத்தபடம்.
    X
    காமராஜர், இந்திரா காந்தி சிலைகளை கே.எஸ். அழகிரி, கனிமொழி எம்.பி., ஆகியோர் திறந்து வைத்த போது எடுத்தபடம்.

    அனைவருக்கும் கல்வி கிடைக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர்-சிலைகள் திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு

    அனைவருக்கும் கல்வி கிடைக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் என நெல்லையில் நடைபெற்ற காமராஜர், இந்திரா காந்தி சிலைகள் திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இருந்த காமராஜர், இந்திரா காந்தி சிலைகள் புனரமைக்கப்பட்டு புதிதாக முழு உருவ வெண்கலச்சிலைகளாக அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த சிலைகளின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரியும், சிலை அமைப்புக் குழு தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். காமராஜர் சிலையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திரா காந்தி சிலையை கனிமொழி எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது வழியில் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக கலைஞர் இருந்தார். ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அனைத்து படிப்புகளுக்கும் தடைக்கற்களாக நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்துள்ளது.

    எந்த நாடு மதம், வெறுப்பு அரசியல் மற்றும் மக்களை பிரித்தாள நினைக்கிறதோ அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் அரசியலை கொண்டு வரக்கூடாது. சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தால் நாடு முன்னேற்ற பாதையில் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.
    தி.மு.க. அயலக அணி துணை பொறுப்பாளர் மகா கிப்ட்சனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நினைவு பரிசு வழங்கிய காட்சி.
    விழாவில் கே.எஸ். அழகிரி பேசுகையில், காமராஜர் 2 பிரதமர்களை உருவாக்கினார் என்றால் அது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர் காமராஜர். அவரது சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சிப் பெண்ணாக இருந்த இந்திராகாந்தி நாட்டில் பசுமை புரட்சியை ஏற்படுத்தியவர் என்றார்.

    இந்த விழாவில் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவரும், சிலை அமைப்புக் குழு செயலாளருமான சங்கர பாண்டியன், பொருளாளர் டியூக் துரைராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், அப்துல் வகாப், ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விஜிலா சத்தியானந்த், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்,

     மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ். காமராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, வக்கீல் அணி மாநில துணைத் தலைவர் மகேந்திரன், தென்காசி மாவட்ட பொருளாளர் முரளிராஜா, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், கணேஷ்குமார் ஆதித்தன், காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலையை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபரும், தி.மு.க. அயலக அணி துணை பொறுப்பாளருமான மகா கிப்ட்சன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் தனசிங் பாண்டியன், மேலப்பாளையம் டாக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     இந்த விழாவில் காமராஜர் சிலையை அன்பளிப்பாக வழங்கிய மகா கிப்ட்சனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வை சேர்ந்த பரமசிவ அய்யப்பன்,நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், பரணி இசக்கி, மண்டல தலைவர்கள் கெங்கராஜ், முகம்மது அனஸ் ராஜா மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலையிலிருந்து மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமையில் ஏராளமான பெண்கள் மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    Next Story
    ×