search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பாலியல் தொல்லையால் 15 வயது சிறுமி கர்ப்பம்

    குடவாசல் அருகே பாலியல் தொல்லை கொடுத்து 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவரது உறவினர் திருமாவளவன் வலுக்கட்டாயமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். 

    இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதையடுத்து சிறுமியை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

    இதுகுறித்து அவரது தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருமாவளவனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×