search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

    தஞ்சை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி (47). 

    இவரது மகள் லலிதா (18). இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம். படித்து வந்தார். 

    இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலி அதிகமாகவே மனமுடைந்த லலிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் பழனி புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×