search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    நூல் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    குமாரபாளையத்தில் நூல் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் நூல் விலையேற்றத்தை
    கண்டித்து குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தி.மு.க. நகர செயலர் செல்வம், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி, எச்.எம்.எஸ்.தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, சுப்ரமணி, பாலசுப்ரமணி, ஆறுமுகம், ஜானகிராமன், செல்வராஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

    நூல் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், ஜவுளி உற்பத்தியாளர் அங்கப்பன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மணுவை குமாரபாளையம் தாசில்தாரிடம் வழங்கினர்.
    Next Story
    ×