search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    இடி, மின்னலுடன் கொட்டிய கன மழை

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.   

    சேலம் மாநகர்  இதையொட்டி சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி,   ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை   6 மணிக்கு   மழை பெய்ய  தொடங்கியது.  இந்த மழை இடி, மின்னலுடன்   விடிய  விடிய சாரல் மழையாக  பெய்தது.

    இதனால் சாலைகளில்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கிச்சிப் பாளையம் நாராணயன நகர், அம்மாம் பேட்டை, பெரமனூர், தாதகாப்பட்டி ஆகிய பகுதகிளில் சாக்கடை நீருடன் மழை நீரும் புகுந்து சாலைகளில்  ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம் புறநகர் இதே போல சேலம் புறநகர் பகுதிகளான வீரகனூர், ஓமலூர், கெங்கவல்லி, காடையாம்பட்டி கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர்  தேங்கியது. இந்த கோைட மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     
    315.5 மி.மீ. மழை  மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஓமலூர் 41, கெங்கவல்லி 40, காடையாம்பட்டி 34, சேலம் 32.5, கரியகோவில் 29, எடப்பாடி 26, மேட்டூர் 25.4, ஆத்தூர் 16, சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம், ஆனை மடுவு பகுதிகளில் தலா  7, ஏற்காடு 5.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 315.5  மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×