search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
    X
    கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு

    பரமத்திவேலூர் பகுதி அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி, அம்மன் மாசாணி அம்மன், அரசாயி அம்மனுக்கு வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் ஆனங்கூர் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.சேளூர் மாரியம்மன், அ.குன்னத்தூர் மாரியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், நன்செய் இடையார் மகாமாரியம்மன், வடகரையாத்துர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
    Next Story
    ×