search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட ஜெயமணிகண்டனை மருத்துவ பரிசோதனைக்கு பின் போலீசார் வெளியே அழைத்துச் சென்ற காட்சி.
    X
    கைது செய்யப்பட்ட ஜெயமணிகண்டனை மருத்துவ பரிசோதனைக்கு பின் போலீசார் வெளியே அழைத்துச் சென்ற காட்சி.

    தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

    ராசிபுரத்தில் தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன், வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது-25). கூலித் தொழிலாளி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

    கொலையாளிகள் யார்? காரணம் என்ன? என்ற விவரம் அப்போது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ராசிபுரம் டவுன், வி. நகர்-18, கருப்பனார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய மணிகண்டன் (28) என்பவரை போலீசார் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டளூர்கேட் பகுதியில் கைது செய்தனர். 

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையொட்டி போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சர்ட்டு மற்றும் பேண்ட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதான ஜெய மணிகண்டன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த ஓராண்டு காலமாக நானும் கொலைசெய்யப்பட்ட ஈஸ்வரனும் மது அருந்துவது வழக்கம். அப்போது நான் குடிக்கும் மதுவை ஈஸ்வரனுக்கும் தருவேன். நான் உண்ணும் உணவில் பாதியை அவர் வாங்கிக் கொள்வார். மது அருந்திவிட்டு என்னை அவர் அடிமைபோல் நடத்துவார். 

    மது வாங்கி வா, சிகரெட் வாங்கி வா, நீ என்ன பெரிய ஆளா? என்று மிகவும் கேவலமாக பேசுவார். இவ்வாறு ஓராண்டு காலமாக ஈஸ்வரன் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. சம்பவத்தன்று நான் மது அருந்திக் கொண்டிருந்தேன். 

    அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் என்னிடம் இருந்த மதுவை வாங்கி குடித்தார். அவருக்கு போதை அதிகமாகவே வழக்கம்போல் என்னை கேவலமாக பேசினார். இந்த நிலையில்தான் அவரை அவரது வீட்டில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட ஜெய மணிகண்டன் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுதப்பட்டார். இதை தொடர்ந்து  நீதிபதி உத்தரவின் பேரில் ஜெயமணி கண்டனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×