என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புளியந்தோப்பில் ரூ. 10 லட்சம் வாடகை பாக்கி: 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
Byமாலை மலர்16 May 2022 7:59 AM GMT (Updated: 16 May 2022 7:59 AM GMT)
புளியந்தோப்பில் வாடகை செலுத்தாக 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர்:
புளியந்தோப்பு, டிம்லர்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 5 கடைகள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள 4 கடைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படவில்லை. இதனால் வாடகை பாக்கி ரூ.10 லட்சம் வரை ஆனது.
இதுகுறித்து திரு.வி.க. நகர் மண்டல வருவாய் அலுவலர்கள் வாடகை பாக்கி செலுத்தக்கோரி கடை உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் வாடகை செலுத்தப்படவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று காலை திரு.வி.க .நகர் மண்டல அலுவலரின் உத்தரவின் படி உதவி வருவாய் அலுவலர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாக 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் கடைகள் முன்பு நோட்டீஸ். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X