search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாவு
    X
    சாவு

    விவசாயி மனனவி பாம்பு கடித்து சாவு

    மதுரையில் விவசாயி மனனவி பாம்பு கடித்து இறந்தார்.
    மதுரை

    மதுரை தென்கரை புதூர் காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி ஆக உள்ளார். இவரது மனைவி வனிதா (வயது 33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வனிதா மாட்டுக்கு புல் அறுப்பதற்காக ஊத்துக்குளி நாச்சியப்பன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்புக்கு சென்றார். அங்கு அவர் புல்லை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. 

    இதனால் வலியில் அலறியவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி வனிதா பரிதாபமாக இறந்தார். 

    இது தொடர்பாக காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை வயலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித் மனைவி முத்துச்செல்வி (வயது 20). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு கவித் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. எனவே உறவினர்கள் தூக்கிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து பெற்றோர் குழந்தையை வீட்டுக்கு கூட்டி சென்றனர். இந்த நிலையில் கவித் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. அப்போது குழந்தையை காப்பாற்ற பெற்றோர் எவ்வளவோ முயன்றனர். இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி குழந்தை கவித் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×