என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை கோழியை கவ்வி சென்றது- கிராம மக்கள் பீதி
Byமாலை மலர்15 May 2022 10:28 AM GMT (Updated: 15 May 2022 10:28 AM GMT)
பாலக்கோடு அருகே கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கோழியை திறந்து வாயில் கவ்விகொண்டு வனப்பகுதியை நோக்கி செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது . உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று விவசாயி வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடமாடியது.
அங்கு கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கோழியை திறந்து வாயில் கவ்விகொண்டு வனப்பகுதியை நோக்கி செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.இதனால் இரவு நேரங்க ளில் கிராமத்துக்குள் புகு ந்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X