search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    பரமத்திவேலூர் கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேகலா(34). 

    இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும்,7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கார்த்திக் அடிக்கடி ‌‌‌மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதை மனைவி கண்டித்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் கார்த்திக் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மேகலா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கார்த்திக் கடந்த 10-ந் தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடினார். 

    இதை பார்த்த அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×