என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 May 2022 10:00 AM GMT (Updated: 15 May 2022 10:00 AM GMT)
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (48), மாட்டு வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரூர்பட்டி பாலிக்கடை என்ற இடத்தில் முத்துவை பாஸ்கர் தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்தனர். உடனே முத்து தனது மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடினார்.
அப்போது அங்கு இருந்த பாஸ்கர் தரப்பினர் முத்துவின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்றதாக கூறப்படுகிறது . இதுபற்றி முத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை மீட்டு தருமாறு புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், புள்ளியண்ணன், கண்ணன், வல்லரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X