search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

    நன்னிலம் அருகே பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நடுகந்தன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சரிதா (வயது 37). 

    இவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறு–பாட்டால் தனியாக இருந்து வருகிறார். இவரது தூரத்து உறவினர் நடு கந்தன்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (28).

    சரிதா அவரது மகனை பார்க்க சென்றுவிட்டு, வீடு திரும்பிய நிலையில்அவரை சுரேஷ்குமார் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் தாக்கி உள்ளார்.
     
    இதில் காயம் அடைந்த சரிதா நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரளம் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    Next Story
    ×