என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கோட்டை வார சந்தை புதுப்பிக்கும் பணிகள் -நகராட்சி தலைவர் ஆய்வு
Byமாலை மலர்15 May 2022 9:31 AM GMT (Updated: 15 May 2022 9:31 AM GMT)
செங்கோட்டை வார சந்தை புதுப்பிக்கும் பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் வாரசந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி புளியரை, தெற்மேடு, கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, தவணை வல்லம் பிரானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்து செல்வது வழக்கம்.
மேலும் மிகுந்த பாரம்பரியமிக்க வார சந்தைக்கு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல அதிகளவில் வந்து செல்வர். அன்றைய நாளில் செங்கோட்டை வார சந்தை காலை முதலே களைகட்டும்.
ஏற்கனவே தற்போது வாரசந்தை செயல்பட்டு வரும் இடத்தில் பழங்கால கட்டிடங்கள் மிகவும் பழமை வாய்ந்த நிலையில் காணப்படுவதால் இதனை சீரமைக்க வேண்டும் என மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக மிகவும் பழுதடைந்த கட்டிடங்கள் முழுமையாக இடிக்கபட்டு வருகிறது. இதனை நகர்மன்ற சேர்மன் ராமலெட்சுமி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X