என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவை சேர்ந்த சேட்டு என்பது மகன் ரஞ்சித் (வயது31) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்களை கள்ளத்தனமாக மறைத்து வைத்து விற்பனை செய்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரிடமிருந்து 32 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story