search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரிவுபசார விழா
    X
    பிரிவுபசார விழா

    மாணவர்களுக்கு பிரிவுபசார விழா

    தொண்டி அருகே மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு   பொது தேர்வு முடிவடைகிறது. 

    தொடக்கப்பள்ளியை முடித்து பள்ளியை விட்டு பிரியும் மாணவ, மாணவிகள்  தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது.5-ம் வகுப்பு மாணவர்கள் சிறுதொகை சேர்த்து பள்ளிக்கு நாற்காலியை நினைவு பரிசாக வழங்கினர். 

    மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. தன்னுடன் பயின்ற  மாணவ, மாணவிகள் தங்கள் தோழன் தோழிகளுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.  உதவி ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.
    Next Story
    ×