என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தச்சநல்லூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்
Byமாலை மலர்14 May 2022 9:49 AM GMT (Updated: 14 May 2022 9:49 AM GMT)
தச்சநல்லூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 2-வது வார்டுக்குட்பட்ட மங்களாகுடியிருப்பு பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன் மாநகராட்சியில் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் லெனின் உடனடியாக அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மங்களாகுடியிருப்பு பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X