என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி - கணவருக்கு தீவிர சிகிச்சை
Byமாலை மலர்14 May 2022 9:41 AM GMT (Updated: 14 May 2022 9:41 AM GMT)
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
தென்காசி மங்கம்மாள் சாலை அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர்கள் 2 பேரும் நேற்று ஆய்க்குடி சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த கார், மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு செல்வியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரங்கனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆய்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X