என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பரமத்தி வேலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமைமாடு உயிருடன் மீட்பு
Byமாலை மலர்14 May 2022 9:18 AM GMT (Updated: 14 May 2022 9:18 AM GMT)
பரமத்தி வேலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த எருமைமாடு உயிருடன் மீட்க்கப்பட்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான எருமை மாட்டை தனது தோட்டத்தில் மேய்த்துக்கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகே எருமை மாடு மேய்ந்தபோது நிலை தடுமாறி கிணற்றுக்குள் எருமைமாடு விழுந்தது. அதை பார்த்த சுப்பிரமணி அக்கம்பக்கத்தினரை அழைத்து எருமை மாட்டை கிணற்றுக்குள் இருந்து மீட்க முயற்சி செய்தார்.
இருப்பினும் முடியாததால் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி எருமை மாட்டை கயிற்றால் கட்டி லாவகமாக மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X