என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்13 May 2022 7:05 PM GMT (Updated: 13 May 2022 7:05 PM GMT)
சென்னை விமான நிலைய பயணிகள் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பையிலிருந்து 2.12 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
சென்னை:
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் சோதனை செய்தபோது, இரண்டு பேரின் பைகளில் ரப்பர் போன்ற பசைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி முத்தியால் பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மின் ஆகியோரிடமிருந்து ரூ.72.63 லட்சம் மதிப்புள்ள 1.596 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் அறையின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பாலீத்தின் பையிலிருந்து ரூ.97.57 லட்சம் மதிப்புள்ள 2.12 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X