search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தண்டவாளம் அருகே பச்சிளம் குழந்தை உடல்

    ரெயில் தண்டவாளம் அருகே நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் கிடந்தது.
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே, நாடியம்மன் கோவில் செல்லும் சாலையில், ரெயில் தண்டவாளத்தின் அருகே, பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலத்தை அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறியதில் கை, கால்கள் துண்டு துண்டாகக் கிடந்தது.

    இதையடுத்து அங்கிருந்த தெரு நாய்களை விரட்டிய பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

    இது பற்றிய புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறைகேடாக பிறந்த குழந்தையை யாராவது இங்கு வந்து போட்டு சென்றனரா? 
    அல்லது இறந்த குழந்தையை போட்டு சென்றார்களா? 

    உயிருடன் இருந்த குழந்தையை நாய் கடித்ததால் இறந்ததா? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×