என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்துவிடுகிறது-நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
Byமாலை மலர்13 May 2022 9:54 AM GMT (Updated: 13 May 2022 9:54 AM GMT)
தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்துவிடுகிறது என நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை மாவட்டம் மேலச்செவலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை தி.மு.க. மக்களுக்கு அளித்தது. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை.
ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம். அ.தி.மு.க. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது.
தி.மு.க ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும், பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது. பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட மாதம் ரூ. 1000 மதிப்பூதியம் இன்னும் வழங்கப்பட வில்லை.அ.திமு.க. ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.
அடித்தட்டு மக்களும் அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப் பட்டது. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை.
தி.மு.க. ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க . ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது.
எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள் மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஜெயலலிதா போல் நல்லாட்சியை தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு வந்தால் பார்ப்போம் என பதில் அளித்தார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை மாவட்டம் மேலச்செவலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை தி.மு.க. மக்களுக்கு அளித்தது. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை.
ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம். அ.தி.மு.க. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது.
தி.மு.க ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும், பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது. பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட மாதம் ரூ. 1000 மதிப்பூதியம் இன்னும் வழங்கப்பட வில்லை.அ.திமு.க. ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது.
அடித்தட்டு மக்களும் அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப் பட்டது. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை.
தி.மு.க. ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டுக்குள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க . ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது.
எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள் மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஜெயலலிதா போல் நல்லாட்சியை தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு வந்தால் பார்ப்போம் என பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X