என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்13 May 2022 9:49 AM GMT (Updated: 13 May 2022 9:49 AM GMT)
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவையாறு:
தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவில் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அறம் வளர்த்த நாயகி அம்மன், ஐயாறப்பர் தனித்தனி பெரிய தேர்களிலும், பின்னால் விநாயகர், முருகன், ஆட்கொண்டார், சண்டிகேஸ்வரர், அகப்பை சித்தர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர்.
மொத்தம் 2 பெரிய தேர்கள், 5 சிறிய தேர்கள் என 7 தேர்கள் அடுத்தடுத்து வலம் வந்தன.
தேரை கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
நான்கு ராஜவீதிகளிலும் 7 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி அசைந்து வலம் வந்தது. இன்று மாலையில் தேர்கள் அனைத்தும் கீழவீதி நிலையை அடைகிறது. அப்போது சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது.
தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வருகிற 16-ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X